என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற இளம்பெண்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த மரியபுரத்தை சேர்ந்தவர் கேசவன்(வயது 31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை கேசவன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கீர்த்திகா கதறி அழுதார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கேசவன் உடல் அருகே கல் கிடந்தது. அவரது தலையிலும் ரத்தக்காயங்கள் இருந் தன. எனவே மர்மநபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என கருதிய போலீசார் இதுகுறித்து கீர்த்திகாவிடம் விசாரித்தனர்.
அப்போது கீர்த்திகா முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அவரிடம் துருவி, துருவி கேள்விகளை கேட்டனர். அப்போது கீர்த்திகாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மதியழகன்(27) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக கீர்த்திகா கூறினார். கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த கணவர் தன்னை கண்டித்ததாகவும், அவர் உயிரோடு இருந்தால் கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்பதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மதியழகனை வீட்டுக்கு வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கேசவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து மதியழகனை போலீசார் தேடிச் சென்றனர். அவர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்