என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் பேண சில வழிகள்
Byமாலை மலர்1 July 2017 5:05 AM GMT (Updated: 1 July 2017 5:05 AM GMT)
குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் குழந்தையின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தையின் உடலை போர்த்தி கொள்கின்றன.
தாயின் கருப்பை வாய்வழியாக வெளியேறும் குழந்தையின் உடலை சுற்றி மெல்லிய படலமாக நுண்ணுயிரிகள் போர்த்தி கொள்கின்றன. குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் குழந்தையின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தையின் உடலை போர்த்தி கொள்கின்றன.
குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவதன் மூலம் குழந்தையின் உடலில் உருவாகும்,நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தையின் உடலை போர்த்தி கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் எதிராக போராடி குழந்தையை பாதுகாக்கிறது. அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும் குழந்தைகள் மீது மருத்துவமனை சுற்று சூழலில் உள்ள நுண்ணுயிரிகள் குழந்தையின் உடலை சூழ்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
அவை மருந்துகளை எதிர்த்து போராடும் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதனால் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் கட்டுப்பட அதிக காலம் தேவை படலாம். குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கின்றனர்.
தேவை இல்லாமல் ஆண்டிபயாடிக் குழந்தையின் உடலில் மீண்டும் மீண்டும் செலுத்தபடுவதால் பாக்டீரியாகளுக்கு எதிராக போராடி உடலை காக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஆண்டிபயாடிக் அளிக்கப்படுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் செயல்படாமல் முடங்கிவிடுகின்றன. இதனால் நோய்கட்டுப்படாமல் போகின்றது.
இந்த ஆபத்தான நுண் கிருமிகள் வளராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை.
1) பிறந்த குழந்தையை தாயின் மேல் சிறுது நேரம் வைத்தல், இதன் மூலம் தாயுடைய உடலின் நுண்கிருமிகள் பாதுகாப்பு கசவம் போல் குழந்தையை சூழந்து கொள்ளும்.
2) பிரசவ நேரத்தில் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பச்சிளங்குழந்தை பிரிவு தனியாக மற்ற பிரிவுகளுடன் சேர்ந்து இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனித்தல் இதன் மூலம் தேவையற்ற கிருமிகள் குழந்தை பிறக்கும் போது அதனை தாக்கி நோய் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
3) கழிவுநீர் ஆனது நிலத்தடி நீர், கிணற்றுநீரில் கலக்காதவாறு பார்த்துக் கொள்வது.
4) தேவையற்ற நோய்களுக்கு ஆண்டிபயாடிக்கை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது.
இப்படி சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவதன் மூலம் குழந்தையின் உடலில் உருவாகும்,நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தையின் உடலை போர்த்தி கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் எதிராக போராடி குழந்தையை பாதுகாக்கிறது. அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும் குழந்தைகள் மீது மருத்துவமனை சுற்று சூழலில் உள்ள நுண்ணுயிரிகள் குழந்தையின் உடலை சூழ்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
அவை மருந்துகளை எதிர்த்து போராடும் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதனால் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் கட்டுப்பட அதிக காலம் தேவை படலாம். குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கின்றனர்.
தேவை இல்லாமல் ஆண்டிபயாடிக் குழந்தையின் உடலில் மீண்டும் மீண்டும் செலுத்தபடுவதால் பாக்டீரியாகளுக்கு எதிராக போராடி உடலை காக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஆண்டிபயாடிக் அளிக்கப்படுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் செயல்படாமல் முடங்கிவிடுகின்றன. இதனால் நோய்கட்டுப்படாமல் போகின்றது.
இந்த ஆபத்தான நுண் கிருமிகள் வளராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை.
1) பிறந்த குழந்தையை தாயின் மேல் சிறுது நேரம் வைத்தல், இதன் மூலம் தாயுடைய உடலின் நுண்கிருமிகள் பாதுகாப்பு கசவம் போல் குழந்தையை சூழந்து கொள்ளும்.
2) பிரசவ நேரத்தில் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பச்சிளங்குழந்தை பிரிவு தனியாக மற்ற பிரிவுகளுடன் சேர்ந்து இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனித்தல் இதன் மூலம் தேவையற்ற கிருமிகள் குழந்தை பிறக்கும் போது அதனை தாக்கி நோய் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
3) கழிவுநீர் ஆனது நிலத்தடி நீர், கிணற்றுநீரில் கலக்காதவாறு பார்த்துக் கொள்வது.
4) தேவையற்ற நோய்களுக்கு ஆண்டிபயாடிக்கை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது.
இப்படி சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X