என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் விழா: பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
Byமாலை மலர்26 July 2017 5:00 AM GMT (Updated: 26 July 2017 5:00 AM GMT)
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பூக்குழி கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முன் ஆலமூடு அம்மன் நிலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அம்மன் திருமுகம் ஏந்திய யானைகள் அணிவகுத்து சென்றன.
பிறகு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தனர். பெண்கள் முளைப்பாரியை எடுத்து வந்தனர். மேலும் பல பக்தர்கள் அலகு குத்தியும், சூரிய காவடியுடனும், பறக்கும் காவடியுடனும் வந்தனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு கலச பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிகளின் பாயாச குளியலும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து பூப்படைப்பும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவலா சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
நேற்று ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முன் ஆலமூடு அம்மன் நிலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அம்மன் திருமுகம் ஏந்திய யானைகள் அணிவகுத்து சென்றன.
பிறகு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தனர். பெண்கள் முளைப்பாரியை எடுத்து வந்தனர். மேலும் பல பக்தர்கள் அலகு குத்தியும், சூரிய காவடியுடனும், பறக்கும் காவடியுடனும் வந்தனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு கலச பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிகளின் பாயாச குளியலும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து பூப்படைப்பும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவலா சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X