search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டியவை
    X

    கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டியவை

    கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    * கோவிலில் பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்.

    * விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் கோவிலுக்கு செல்லக்கூடாது.

    * புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது.

    * வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது.

    * நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது.

    * மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது.

    * கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது.



    * கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

    * துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.

    * தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.

    * கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.

    * அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.

    * ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.

    * ஆமணக்கு எண்ணெயை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.
    Next Story
    ×