search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதத்தில் தேடி வரும் விரத வழிபாடுகள்
    X

    ஆடி மாதத்தில் தேடி வரும் விரத வழிபாடுகள்

    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.
    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.

    ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதமிருந்து கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.

    ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.

    ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.



    ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக்கிழமை சனிப்பிரதோஷம். அன்றைய தினம் விரதமிருந்து நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.

    ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் விரதமிருந்து கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.

    ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் விரத வழிபாடு கவலையைப் போக்கும்.

    ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
    Next Story
    ×