search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் பலான படத்தில் அறிமுகமான நடிகரின் ஒரு சில படம் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடிவிட்டதாம். இதையடுத்து தானும் ஒரு நடிகர் என்று நினைத்துக் கொண்ட அவருக்கு, உலக புகழ் பெற்றவரின் தயாரிப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்தில் நடித்ததால் தானும் உலக புகழ் பெற்ற நடிகர் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டதாம். நடிகரின் பேச்சும் நடத்தையும் முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக இருக்கிறதாம். நடிகருடன் நன்றாக பேசுபவர்களே, அவரை விட்டு விலகி சென்று வருகிறார்களாம். மேலும் நடிகரின் ஆட்டம் எவ்வளவு தூரம் போகுதுனு பார்ப்போம் என்று நெருங்கியவர்கள் பேசி வருகிறார்கள்.

    முன்னணி நடிகை ஒருவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாராம். திடீரென பிரபல இயக்குனர் தன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இந்த நடிகை தான் சரியாக இருப்பார் என்று அவரை புக் செய்தாராம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவே பல இயக்குனர்கள் பார்வை நடிகையின் மீது திரும்பியதாம்.

    இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகையை பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க புக் செய்தார்களாம். ஒப்பந்தம் செய்தது செய்தபடியே இருக்கிறது என்று நடிகையை ஷூட்டிங்கிற்கு வருமாறு இயக்குனர் அழைத்தால் இதோவரேன், அதோவரேன் என்று அலைக்கழித்து வருகிறாராம். இதனால் கடுப்பான இயக்குனர் இந்த நடிகையை வேண்டாம் நம்மோட அந்த நடிகையை புக் செய்யுங்கள் என்று மற்றொரு நடிகையை தட்டி தூக்கிவிட்டாராம்.

    வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று இருக்கும் மூன்றெழுத்து நடிகை ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தாராம். பின்னர் வயதாக, வயதாக பட வாய்ப்புகள் குறையவே நடிகை கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தாராம். பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினாலும் நான் ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம்.

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அவ்வப்போது ரசிகர்களை காண நேரலையில் வருகிறாராம். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் 40 வயதிலும் ஹீரோயினாக நடிக்கும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்களாம். இதனால் குஷியான நடிகை நடித்தால் ஹீரோயின் தான் இல்லையென்றால் எனக்கு வாய்ப்பே தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.

    பிரபல நடிகை ஒருவர் தென்னியந்திய திரையுலகை ஒரு கலக்கு கலக்கினாராம். இவர் சமீபத்தில் பாலிவுட்டுக்கு செல்ல அங்கு பிரபல நடிகருடன் காதல் வசப்பட்டாராம். காதலருடன் நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் அதிக கவர்ச்சியிலும் முத்தக்காட்சியிலும் நடித்து பெரும் சலசலப்புக்கு உள்ளானாராம்.

    இவர்களின் திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பினார்களாம். இதற்கு எந்த பதிலும் அளிக்காத அந்த நடிகை சிரித்தே சமாளித்து வந்தாராம். தற்போது அந்த கேள்வியை நடிகையின் வருங்கால மாமியாரே கேட்க தொடங்கிவிட்டாராம். மாமியாரின் ஆசையை நிறைவேற்றுவது தன் கடமை என்று நண்பர்களிடம் அந்த நடிகை பில்டப்பாக பேசிவருகிறாராம். 

    இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.

    இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.

    தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.

    பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தமிழில் நடன இயக்குனர் நடித்த படத்தில் நடித்திருந்தாராம். அதில் இடம்பெற்ற நிலவு குறித்த பாடல் ஒன்று இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதாம். தற்போது அம்மா நடிகையாக மாறியிருக்கும் அந்த நடிகையின் வெப் சீரிஸ் ஒன்று சமீபத்தில் வெளியானதாம்.

    தனது கணவர் தயாரித்திருந்த அந்த சீரிஸில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முத்தக் காட்சியில் அந்த நடிகை நடித்துள்ளாராம். இதனால் இந்த வயதில் இது போன்ற முத்தக்காட்சி தேவையா? என்றும் கணவர் தயாரித்த சீரிஸில் துணிச்சலுடன் நடித்திருக்கிறாரே என்றும் பலரும் பேசி வருகிறார்களாம்.

    சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.

    காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை சமூக வலைதளத்தையும் விட்டு வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்தாராம்.

    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இந்த நடிகை இப்படி பண்றாங்க என்று வசைபாடி வருகிறார்களாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை நான் செய்வதை தான் செய்வேன் என்று படு கவர்ச்சியாக உலா வருகிறாராம்.

    ஒரு சாதாரண கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அதன்பின் இயக்குனர் ஒருவர் கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன் திறமையினால் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தாராம். உச்ச நடிகராக இருக்கும் இந்த ஹீரோ பல இளம் நடிகைகளுக்கு தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து அவர்களது வளர்ச்சியை உயர்த்தி வருகிறாராம்.

    இப்படி பல நடிகைகளுடன் நடிக்கும் இந்த ஹீரோ பட வாய்ப்புகளை அவர்களுக்கு சும்மா கொடுப்பதில்லையாம். அதாவது தான் நினைக்கும் நேரத்தில் அந்த நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம். இந்த நடிகரால் தானே நாம் உயர்ந்தோம் என்ற விசுவாசத்தில் நடிகைகளும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு ஒத்துழைத்து வருகிறார்களாம்.

    குறும்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை அதன் பின்னர் ஒரு சில படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க ஒப்பந்தமானாராம். இப்படி கிடைத்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது நடிகையை பிரபல இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடிக்க அணுகினாராம். இதனால் படு குஷியான நடிகை அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

    ஆனால், அந்த இயக்குனர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று ஸ்டிரிக்டாக கூறிவிட்டாராம். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்புகள் கிடைக்காதே என்று நினைத்த நடிகை நிர்வாணமாக நடிப்பதற்கு ஓகே சொன்னாராம். இதுதான் வாய்ப்பு என்று நிர்வாண காட்சியை பலமுறை ரீடேக் எடுத்தாராம் இயக்குனர்.

    ஒரு வழியாக படம் வெற்றி பெற்றதும் வாய்ப்புகள் குவியும் என நினைத்த நடிகைக்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் கிடைத்ததோடி சரி அதன்பின் நடிகை சினிமா பக்கமே வரமுடியாமல் ஆகிவிட்டதாம். இதானல் விரக்தியடைந்த நடிகை சமூக வலைதளத்திலாவது பிரபலமாகலாம் என்று கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறாராம்.

    திரையுலகில் மூன்றெழுத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பீபியை எகிற வைத்து வருகிறாராம்.

    நடிகையின் அழகில் மயங்கிய பலர் நடிகைக்கு தூண்டில் போட்டு வருகிறார்களாம். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை பார்ட்டி, பாரு என காலத்தை கழித்து வருகிறாராம்.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறாராம். தன் திறமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையை அடைய நினைத்த வாரிசு நடிகரின் மகன் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

    நடிகையுடன் எப்படியாவது நட்பு கொள்ள வேண்டும் என கடுமையாக முயற்சிக்கும் வாரிசு நடிகரின் மகன் ஒருபடி மேலே சென்று நடிகையை தான் அழைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள வற்புறுத்தி வருகிறாராம். இதனால் கோபமான நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

    குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே திருமணம் செய்து கொண்டு வந்த படங்களை நடித்து வருகிறாராம். இப்படி ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையின் பந்தா குறையவே இல்லை என்று தொகுப்பாளர்கள் பலர் திட்டி தீர்க்கின்றார்களாம்.

    தொகுப்பாளருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ஏளனமாக பேசும் நடிகை நேர்காணல் முடிந்ததும் குழு புகைப்படத்தில் கூட நிற்காமல் ஓடிவிடுகிறாராம். இதனால் கடுப்பான தொகுப்பாளர்கள் நீங்கள் வெறும் நடிகை தான் கடவுள் இல்லை. அழகு என்பது முகத்தில் இருப்பது இல்லை மனதில் இருப்பது என நடிகையை சரமாரியாக பேசுகிறார்களாம்.

    ×