search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் பிக்சல் போன் உற்பத்தியை தீவிரப்படுத்தும் கூகுள்
    X

    இந்தியாவில் பிக்சல் போன் உற்பத்தியை தீவிரப்படுத்தும் கூகுள்

    • பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் திட்டம்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 10 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் துவங்கும் என்றும் இவை 2023 முதல் கிடைக்கும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.


    இவ்வாறு செய்வதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை சீனா மட்டுமின்றி இதர சந்தைகளிலும் விரிவுப்படுத்த முடியும். வரும் வாரங்களில் டாப் என்ட் பிக்சல் 8 ப்ரோ மாடலை உற்பத்தி செய்வதற்கான ப்ரோடக்ஷன் லைனை உருவாக்கவும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உற்பத்தி பணிகளை துவக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    Next Story
    ×