search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dryness"

    • உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்களின் வெளிப்பாடே அரிப்பு.
    • நோய் வருவதற்கு முன்பே அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பாலானவர்கள் `அரிப்பு' என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்றப் போகிறது என தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறப்புறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையில் உள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

    கருவுற்ற காலங்களில் கர்பப்பை வாசல், பிறப்புறுப்பு போன்றவற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறப்புறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்து குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.

     குண்டாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு. அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான்.
    • பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை.

    வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

     செய்முறை-1

    தேவையான பொருள்கள்

    வெள்ளை வினிகர்

    கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)

    ஆலிவ் ஆயில்

    வெந்நீர்

    செயல்முறை

    முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

    கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

    அதன்பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

     செய்முறை-2

    தேவையான பொருள்கள்

    அவகடோ - ஒன்று

    வாழைப்பழம் - இரண்டு

    செயல்முறை

    அவகெடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும். இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.

    இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்பு குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

     செய்முறை 3

    தேவையான பொருள்கள்:

    பூசணிக்காய்

    காபி தூள்

    நாட்டுச்சக்கரை

    பாதாம் எண்ணைய்

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

    பூசணி பேஸ்ட்டுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின்னர், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.

    • உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
    • தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.

    அறிகுறிகள்:

    கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.

    காரணங்கள்:

    * எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.

    * பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.

    * தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    * காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

    தீர்வு:

    * உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.

    * நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

    * 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.

    * சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.

    * வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    * நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    ×