search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்- ப.சிதம்பரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்- ப.சிதம்பரம்

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.

    காரைக்குடி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×