search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகப்பெருமானின் மூன்று வாகனங்கள்
    X

    முருகப்பெருமானின் மூன்று வாகனங்கள்

    • முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு.
    • மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன்.

    முருகனின் வாகனம் என்றாலே, மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அவை மயில், யானை, ஆட்டுக்கிடா ஆகும்.

    * தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும், ராஜகம்பீரம் கொண்டவர் என்பதாலும் அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

    * ஒருசமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்கச் செய்து தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.

    * சூரபதுமனுடன் முருகப்பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபதுமன். ஆனாலும் அவன் தோல்வியையே தழுவினான். ஒரு முறை சக்கரவாகப் பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான். பின்னர் சூரன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார். அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறியது.

    மயில் `ஆணவம்' என்றும், யானை `கன்மம்' என்றும், ஆடு `மாயை' என்றும், மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன் என்பதே இதன் சான்று.

    Next Story
    ×