வழிபாடு

நலம் தரும் ராம நவமி கொண்டாட்டம்

Published On 2024-04-12 05:20 GMT   |   Update On 2024-04-12 05:20 GMT
  • ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்’ என வைணவங்கள் கூறுகின்றன.
  • கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள்.

ராமபிரான் அவதரித்த நாளே ராம நவமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிலையான வெற்றியும், நீடித்த செல்வமும் நிலைக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது.

ராவண யுத்தம் புராண காலத்தில் நடந்த ஒன்று என ஒதுக்கிவிட முடியாது. இது தேவ சக்திகளுக்கும், அசுர சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைக் குறிக்கின்றது. முடிவில் தேவ சக்தியே வெல்லும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்' என வைணவங்கள் கூறுகின்றன. துளசி ராமாயணம் காந்தியடிகளின் மனங்கவர்ந்த நூலாக அமைந்திருந்தது. சகோதர தர்ம சாஸ்திரமாகவும், பேரிதிகாசமாகவும் கம்பராமாயணம் உள்ளது.

ராமநவமி பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருவதை திருவரங்கம், ஓரகடம் உள்ளிட்ட சில வைணவ திருக்கோவில் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. அயோத்தி உள்ளிட்ட நாடெங்கிலும் உள்ள பல்வேறு வைணவ திருக்கோவில்களில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் ரத உற்சவமும் நடைபெறும்.

Tags:    

Similar News