என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில் தலையிட மாட்டோம்: ஐ.நா. சபை அறிவிப்பு
Byமாலை மலர்23 Jan 2018 7:49 PM GMT (Updated: 23 Jan 2018 8:25 PM GMT)
இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தால் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளதாகவும், அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் சமீபகாலமாக தொடர்ந்து மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து ஐ.நா. பொது சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறார். எந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தீர்க்க அவர் தயாராக உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக என்ன நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளார்.
அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விருப்பம் தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் சமீபகாலமாக தொடர்ந்து மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து ஐ.நா. பொது சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறார். எந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தீர்க்க அவர் தயாராக உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக என்ன நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளார்.
அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விருப்பம் தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X