என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: கலிபோர்னியாவில் இலகு ரக ரெயில் மோதி இந்தியர் பலி
Byமாலை மலர்17 Dec 2017 10:31 AM GMT (Updated: 17 Dec 2017 10:31 AM GMT)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இலகு ரக ரெயில் மோதி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா எராவெள்ளி(44). இவர் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள அல்பேனி நகரில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த மூன்று வாரத்துக்கு முன்னர் வேலை விசயமாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இலகு ரக ரெயில் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த கிருஷ்ணா எராவெள்ளியின் உடலை இறுதி சடங்குக்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X