என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
Byமாலை மலர்30 Oct 2017 9:05 PM GMT (Updated: 30 Oct 2017 9:05 PM GMT)
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதிமறுக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பையடுத்து அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பையடுத்து அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X