என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏமனில் அமெரிக்க தாக்குதலில் 7 அல்கொய்தா பயங்கரவாதிகள் பலி
Byமாலை மலர்24 May 2017 5:10 AM GMT (Updated: 24 May 2017 5:10 AM GMT)
ஏமனில் நேற்று காலை அமெரிக்க போர் விமானங்கள் வான்தாக்குதல் நடத்தியதில் 7 அல்கொய்தா பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
ஏமன் நாட்டில் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் மீது அவ்வப்போது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட இடத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தை குறி வைத்து நேற்று காலை அமெரிக்க போர் விமானங்கள் வான்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் 7 அல்கொய்தா பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதை அமெரிக்க ராணுவ மத்திய தலைமை உறுதி செய்தது.
இது குறித்து அமெரிக்க ராணுவ மத்திய தலைமை விடுத்துள்ள அறிக்கையில், “ஏமன் அரசு ஆதரவுடன் மாரிப் மாகாணத்தில் ஒரே நேரத்தில் வான்தாக்குதலும், சிறிய ரக ஆயுத தாக்குதலும் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டாலும், அமெரிக்க தரப்பில் சேதம் எதுவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் மீது அவ்வப்போது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட இடத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தை குறி வைத்து நேற்று காலை அமெரிக்க போர் விமானங்கள் வான்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் 7 அல்கொய்தா பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதை அமெரிக்க ராணுவ மத்திய தலைமை உறுதி செய்தது.
இது குறித்து அமெரிக்க ராணுவ மத்திய தலைமை விடுத்துள்ள அறிக்கையில், “ஏமன் அரசு ஆதரவுடன் மாரிப் மாகாணத்தில் ஒரே நேரத்தில் வான்தாக்குதலும், சிறிய ரக ஆயுத தாக்குதலும் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டாலும், அமெரிக்க தரப்பில் சேதம் எதுவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X