என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை கழுத்தை நெறித்து கொன்று, தற்கொலைக்கு முயன்ற இந்தியர்
Byமாலை மலர்30 April 2017 2:48 PM GMT (Updated: 30 April 2017 2:48 PM GMT)
நேபாளத்தில் இந்தியர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு:
இந்தியாவைச் சேர்ந்த ராஜூ சவுதரி என்பவர் நேபாளத்தில் உள்ள இலாம் பகுதியில் புட் ஸ்டால் வைத்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக்கொண்டு சவுதரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தி பிரண்ட் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனைவி மீதான கோபத்தால் தனது 8 வயது மூத்த மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது 3 வயதான 2-வது குழந்தையின் கழுத்தையும் நெறித்துள்ளார்.
அந்த குழந்தை மயக்கம் அடைய, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் ரூமில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது பேன் முறிந்து விழுந்தது. இதனால் கிழே விழுந்த சவுதரிக்கு பயங்கரமாக காயம் ஏற்பட்டது.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் முதலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு குழந்தை இறந்த நிலையிலும், ஒரு குழந்தை மயக்கத்திலும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அளித்தனர்.
வலியால் துடித்த சவுதரியை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ராஜூ சவுதரி என்பவர் நேபாளத்தில் உள்ள இலாம் பகுதியில் புட் ஸ்டால் வைத்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக்கொண்டு சவுதரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தி பிரண்ட் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனைவி மீதான கோபத்தால் தனது 8 வயது மூத்த மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது 3 வயதான 2-வது குழந்தையின் கழுத்தையும் நெறித்துள்ளார்.
அந்த குழந்தை மயக்கம் அடைய, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் ரூமில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது பேன் முறிந்து விழுந்தது. இதனால் கிழே விழுந்த சவுதரிக்கு பயங்கரமாக காயம் ஏற்பட்டது.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் முதலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு குழந்தை இறந்த நிலையிலும், ஒரு குழந்தை மயக்கத்திலும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அளித்தனர்.
வலியால் துடித்த சவுதரியை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X