என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் இந்து கோயில் சூறை - சாமி சிலைகளை கால்வாயில் தூக்கி வீசிய கொடூரம்
Byமாலை மலர்29 April 2017 9:07 AM GMT (Updated: 29 April 2017 9:07 AM GMT)
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து கோயிலை சூறையாடிய நாசக்காரர்கள் அங்கிருந்த சாமி சிலைகளை எடுத்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தாட்ட மாவட்டத்தில் உள்ள காரோ என்ற பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வழிபாட்டுக்காக இங்குள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்த நாசக்காரர்கள் கோயிலை சூறையாடியதுடன் அங்கிருந்த சாமி சிலைகளை உடைத்து அருகாமையில் உள்ள கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
நேற்று பின்னிரவு சுமார் ஒரு மணியில் இருந்து இன்று அதிகாலை ஐந்து மணிக்குள் நடைபெற்றதாக கருதப்படும் இந்த அத்துமீறல் தொடர்பாக மத அவமதிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது.
தங்களது வணக்கஸ்தலத்தை நாசப்படுத்தியதுடன் தெய்வச் சிலைகளை உடைத்து கால்வாய்க்குள் வீசிச் சென்ற சம்பவம் இங்குள்ள இந்து மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தாட்ட மாவட்டத்தில் உள்ள காரோ என்ற பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வழிபாட்டுக்காக இங்குள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்த நாசக்காரர்கள் கோயிலை சூறையாடியதுடன் அங்கிருந்த சாமி சிலைகளை உடைத்து அருகாமையில் உள்ள கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
கோப்புப்படம்
நேற்று பின்னிரவு சுமார் ஒரு மணியில் இருந்து இன்று அதிகாலை ஐந்து மணிக்குள் நடைபெற்றதாக கருதப்படும் இந்த அத்துமீறல் தொடர்பாக மத அவமதிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது.
தங்களது வணக்கஸ்தலத்தை நாசப்படுத்தியதுடன் தெய்வச் சிலைகளை உடைத்து கால்வாய்க்குள் வீசிச் சென்ற சம்பவம் இங்குள்ள இந்து மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X