search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்துங்கநல்லூர் போலீசில் திருமாவளவன் மீது பா.ஜ.க.வினர் புகார்
    X

    செய்துங்கநல்லூர் போலீசில் திருமாவளவன் மீது பா.ஜ.க.வினர் புகார்

    செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் திருமாவளவன் மீது தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயலாளர் மாரியப்பன் புகார் மனு கொடுத்துள்ளார்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் திருமாவளவன் மீது தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயலாளர் மாரியப்பன் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தலித் இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் திருமாவளவன் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக சிவன், பெருமாள் கோவில்களை இடித்து புத்தவிகார் கட்ட வேண்டும்.ஸ்ரீரங்கநாதர் படுத்திருக்கும் இடத்தையும், ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் கொண்டிருக்கும் இடத்தையும், புத்தவிகாராக மாற்ற வேண்டும் என்று பேசி உள்ளார்.

    இந்துவாகிய நான் வணங்கும் கடவுள்களின் கோவில்களையும், சிலைகளையும், இடித்து புத்தவிகார் கட்ட வேண்டுமென்று எனது மத நம்பிக்கையும், என் மனதையும் திடுக்கிடும் வகையில் புண்படுத்தி பேசி, அதனால் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தை சேர்ந்த இரு பிரிவுகளுக்கிடையே கலவரத்தை தூண்டும் வண்ணம் பொது இடத்தில் பேசிய திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×