என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு கம்பியில் மோதி மாணவன்-வாலிபர் பலி
Byமாலை மலர்12 Dec 2017 7:12 AM GMT (Updated: 12 Dec 2017 7:12 AM GMT)
மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு கம்பியில் மோதி மாணவன் மற்றும் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு டவுன் களத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விக்ரம் (வயது 16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (30). தொழிலாளி. நேற்று இரவு 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வில்லியம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
திம்மாவரம் அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அப்போது வாகன சோதனைக்காக போடப்பட்டு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார்சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X