search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலம் அருகே நள்ளிரவு வீடுகளுக்குள் லாரி புகுந்தது: கணவன்-மனைவி படுகாயம்
    X

    நன்னிலம் அருகே நள்ளிரவு வீடுகளுக்குள் லாரி புகுந்தது: கணவன்-மனைவி படுகாயம்

    நன்னிலம் அருகே நள்ளிரவு வீடுகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி படுகாயம்.

    நன்னிலம்:

    கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி காரைக்கால் நோக்கி வந்தது.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அந்த லாரி திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அத்த அச்சுதமங்கலம் மெயின் ரோட்டில் வந்தது. அப்போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு குடிசை வீட்டில் புகுந்து அடுத்துள்ள ஓட்டு வீட்டிலும் புகுந்தது. இதில் குடிசை வீட்டில் வசிக்கும் சரவணன், பார்வதி மற்றும் அவரது 4 குழந்தைகள் ஒரு ஓரமாக தூங்கிக்கொண்டு இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். சரவணன் லேசான காயமடைந்தார்.

    இந்த விபத்தில் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராமன், அவரது மனைவி பேபி ஆகியோர் லாரி மோதியதில் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளுக்குள் லாரி புகுந்து 2 பேர் காயமடைந்ததை கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டர்.

    இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அச்சுதமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×