என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் மத்திய சிறையில் கைதிகள் மோதல்
Byமாலை மலர்18 Nov 2017 10:45 AM GMT (Updated: 18 Nov 2017 10:45 AM GMT)
மத்திய சிறையில் கைதிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் மகபூப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தரபாண்டி, மாய கிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோரும் மத்திய சிறையில் உள்ளனர்.
இதே சிறையில் மணிகண்டனின் உறவினர் வித்யானந்த் என்பவரும் கைதியாக உள்ளார். இவருக்கும், சுந்தரபாண்டி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வித்யானந்த், அதே சிறையில் உள்ள அவரது நண்பர்கள் சிவக்குமார், சதாம் உசேன், ராஜா ஆகியோர் சுந்தரபாண்டி தரப்பினரிடம் தகராறு செய்தனர்.
4 பேரும் சேர்ந்து சுந்தர பாண்டி, மாயகிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோரை தாக்கினர். மோதல் குறித்து உதவி ஜெயிலர் ராஜேந்திரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X