search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளை பொருட்களை பாதுகாக்க செங்குன்றத்தில் சேமிப்பு கிடங்கு: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
    X

    விளை பொருட்களை பாதுகாக்க செங்குன்றத்தில் சேமிப்பு கிடங்கு: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    விளை பொருட்களை பாதுகாக்க செங்குன்றத்தில் சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மதில்சுவருடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    இந்த சேமிப்பு கிடங்கு, விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மழை, வெயில், ஈரப்பதம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்து விஞ்ஞான முறைப்படி சேமிப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம்-செம்பனார் கோயில், பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் மற்றும் துரிஞ்சாபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக்கட்டடங்கள்;

    நபார்டு வங்கியின் “கிடங்கு உட்கட்டமைப்பு நிதி”யின் கீழ் ஈரோடு மாவட்டம் மயிலம்பாடியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலுவலகக்கட்டடத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு;

    விழுப்புரம் மாவட்டம்- மணலூர்பேட்டையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; திருவாரூர் மாவட்டம்-வலங்கைமானில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம்; திருவண்ணாமலை மாவட்டம்-அம்மாபாளையத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் பதப்படுத்தும் மையம்; ஈரோடு மாவட்டம்- வில்லரசம்பட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம்; திருவண்ணாமலை மாவட்டம்-திருவண்ணாமலையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம்;

    என மொத்தம் 17 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புறநகர் வீட்டு காய்கறி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ், கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கன்காய், மிளகாய், கொத்தவரங்காய், மற்றும் கீரைவகைகள் ஆகிய காய்கறிகளில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய 6,25,000 பாக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை வழங்கினார்.


    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ரகுநாதபுரத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 25 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    முதுகுளத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள் மற்றும் கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம்;

    என மொத்தம் 34 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    Next Story
    ×