search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்: தீபா பேட்டி
    X

    ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்: தீபா பேட்டி

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று திருச்சி வந்த எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.






    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று திருச்சி வந்த எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சி :

    திருச்சி வந்த எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    என்னுடைய கட்சி கலைக் கப்பட்டு விட்டதாகவும், செயல்பாடுகள் முடங்கி விட்டதாகவும் கூறுவது தவறு. எனது செயல்பாடுகள் முடங்கவில்லை. தொண்டர் களையும், பொதுமக்களையும் சந்த்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

    எடப்பாடி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம் தொண்டர்க ளும், மக்களும் என்ன விரும் புகிறார்களோ அதன்படி செயல்படுவேன்.

    டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் மக்கள் பல்வேறு துன்பங் களை சந்தித்து வருகிறார் கள். ஆனால் தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படா மல் பல கோடி அரசு செல வில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது.

    அவ்வாறு கோடிக்கணக் கில் செலவு செய்து விழா நடத் தியும் யாரை முன்னிலைப் படுத்துவது என்று தெரியா மல் இருக்கிறார்கள். தம்பி துரை இரு அணிகளும் இணையவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனாலும் தீபா அணி எப் போதும் தனித்துதான் செயல் படும். இது மக்கள் அணி.

    ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டு மக்கள் ஆதர வோடு வெற்றி பெறுவேன். பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன ஆர்.கே.நகர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் நான் வெற்றி வெற்று ஜெய லலிதா விட்டுச்சென்ற பணி களை தொடர்வேன்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினையில் தேர்தல் ஆணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. இர அணிகளுமே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. நாங்களும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்திருந்தபோதிலும் இரு அணிகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். விவாதத்திற்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தெரியவரும்.

    இருந்தபோதிலும் கட்சி, சின்னம் ஆகியவை யாருக்கு என்பதை தொண்டர்களே முடிவு செய்வார்கள். தமிழக சுகாதாரத்துறை செயல்படா மல் உள்ளது. மக்கள் பிரச் சினைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்க வில்லை.

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகள் கட்டாயத்தின் பேரில் இணைந்துவிட்டது. இதன் பின்னணியில் மத்திய அரசும், தமிழகத்தில் சிலரும் உள்ளனர். ஆனாலும் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே சரியான புரிதல் இல்லை. தினகரன் மக்கள் பிரச்சினைகள் பற்றி கவ லைப்படவில்லை. அவர் ஆட் சியை கலைப்பதிலேயே குறி யாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×