search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமாரை முகநூலில் விமர்சித்தவர் கைது: சென்னை போலீஸ் நடவடிக்கை
    X

    அமைச்சர் ஜெயக்குமாரை முகநூலில் விமர்சித்தவர் கைது: சென்னை போலீஸ் நடவடிக்கை

    அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து முகநூலில் பதிவுகள் போடப்படுவதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து முகநூலில் பதிவுகள் போடப்படுவதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் சதீஸ்குமார் என்ற வாலிபர் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து முகநூலில் பதிவிட்டது தெரிய வந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த அவரை போலீசார் நேற்று பிடித்தனர். பின்னர் சதீஷ் குமார் சென்னை அழைத்து வரப்பட்டார். இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.

    எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வைத்து சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×