என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது: செயலாளர் ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்26 Sep 2017 7:06 AM GMT (Updated: 26 Sep 2017 7:06 AM GMT)
தமிழக பகுதிகளிலும் டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்து வருவதால் டெங்கு குறைந்து வருகிறது. அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இது சாக்கடை, கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகாது. நல்ல நீரில் இருந்து கொசு உற்பத்தியாகி முட்டையிட்டு டெங்கு பரவுகிறது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பாதித்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு ஆஸ்பத்திரிகளிலோ சென்று சிகிச்சை பெறலாம். டாக்டர் சீட்டு இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது.
டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டால் எந்த பயமும் இல்லை. தாமதமாக வருவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்து வருவதால் டெங்கு குறைந்து வருகிறது. அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் டெங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இது சாக்கடை, கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகாது. நல்ல நீரில் இருந்து கொசு உற்பத்தியாகி முட்டையிட்டு டெங்கு பரவுகிறது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பாதித்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு ஆஸ்பத்திரிகளிலோ சென்று சிகிச்சை பெறலாம். டாக்டர் சீட்டு இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது.
டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டால் எந்த பயமும் இல்லை. தாமதமாக வருவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X