search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு - பக்கத்து வீட்டு வாலிபர் வெறிச்செயல்
    X

    தஞ்சையில் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு - பக்கத்து வீட்டு வாலிபர் வெறிச்செயல்

    தஞ்சையில் பள்ளி மாணவனை பக்கத்து வீட்டு வாலிபர் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடைய மகன் கிஷோர் (11). இவன் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 23-ந் தேதி மாலை இவன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

    நண்பர்கள் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் கிஷோர் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழ் வேந்தன் மகன் அரவிந்த் (21) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவன் கிஷோரை கொலை செய்து அருகில் உள்ள காலி மைதானத்தில் புதைத்தது தெரிய வந்தது.

    அவர் காட்டிய அடையாளத்தை வைத்து மாணவன் பிணத்தை இன்று போலீசார் தோண்டி எடுத்தனர். கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக அரவிந்திடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    சம்பவத்தன்று அரவிந்த் மது போதையில் அங்கு சிகரெட் பிடித்தபடி வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து வேறு இடத்தில் விளையாடுங்கள் என சத்தம் போட்டுள்ளார்.

    அதற்கு மாணவன் கிஷோர் நீங்கள் வேறு இடத்திற்கு சென்று சிகரெட் பிடியுங்கள் என தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் மாணவன் கிஷோர் கழுத்தை பிடித்து தூக்கி உள்ளார். இதில் கழுத்து இறுகி மாணவன் வாயில் இருந்து நுரை தள்ளி, அவன் சம்பவ இடத்திலே இறந்து விட்டான்.

    இதனால் பயந்து போன அரவிந்த் அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தை மாணவன் பிணத்தை புதைத்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    போலீசாரின் தீவிர விசாரணையில் அரவிந்த் சிக்கி கொண்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

    பள்ளி மாணவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×