search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொருக்குப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    கொருக்குப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    கொருக்குப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, ஜமால் சவுகார் தெருவை சேர்ந்தவர் காலீசா. நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.

    இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 24 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    Next Story
    ×