என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் தனியார் பஸ் மோதி பெண் வங்கி அதிகாரி பலி
கோவை:
சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம் பாளையம் தாமோதர சாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சோமசுந்தரி(வயது 30).
இவர் பல்லடத்தில் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று காலை சோமசுந்தரி வங்கிக்கு செல்வதற்காக சிங்கா நல்லூர் பஸ் நிலையத்துக்கு தனது தந்தை சங்கரனுடன் மொபட்டில் சென்றார். காமராஜர் சாலையில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் எதிர்புறம் சென்றபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மொபட் இறங்கவே மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த சோமசுந்தரி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது.
இதில் அவர் உடல் நசுங்கி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த சங்கரன் கதறி அழுதார். விபத்து பற்றிய தகவலறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்