search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசீலா
    X
    சுசீலா

    நிலத்தகராறில் பெண் கொலை - உறவினர்கள் 4 பேர் சிக்கினர்

    சங்கராபுரம் அருகே நிலத்தகராறு காரணமாக சுசீலா கொலை செய்யப்பட்டதையடுத்து போலீசார் உறவினர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடமாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுசீலா (வயது 49). இவர்களுக்கு ரவி (32), ஆனந்தன் (30) ஆகிய மகன்களும், சந்திரலேகா (28) என்ற மகளும் உள்ளனர்.

    மகன்கள் 2 பேரும் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். சந்திரலேகாவுக்கு திருமணமாகி மணலூர்பேட்டையில் வசித்து வருகிறார்.

    கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் இறந்து விட்டார். சுசீலா தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

    அவர் தினமும் வயலுக்கு சென்று பார்வையிட்டார். இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் வயலுக்கு சென்ற சுசீலா வீடு திரும்பவில்லை. அங்குள்ள கரும்பு வயலில் சுசீலா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். சுசீலாவின் 2 கால்களும் சேலையால் கட்டப்பட்டு இருந்தது.

    மேலும் அவரது முகம் முழுவதும் சகதியால் பூசப்பட்டு இருந்தது. யாரோ மர்ம மனிதர்கள் கொடூர முறையில் கொலை செய்து விட்டு அவரது முகத்தில் சகதியை பூசி சென்றுள்ளது தெரிந்தது.

    இந்த கொலையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் சாய்னா கொண்டு வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர் சண்முகம், அங்குள்ள தடயங்களை சேகரித்தார்.

    அதன் பின்னர் போலீசார் சுசீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மூங்கில்துறைப்பட்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அதில் நிலத்தகராறு காரணமாக சுசீலா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×