search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இன்று தலைமை பொறியாளர் ஆய்வு
    X

    மேட்டூர் அணையில் இன்று தலைமை பொறியாளர் ஆய்வு

    பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பழனிகுமார் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார்.
    மேட்டூர்:

    பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பழனிகுமார் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார்.

    அவர் அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டூர் அணை புனரமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ரூ.10.50 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை நினைவு கூறும் வகையில் காவிரி தாய்க்கு நினைவு தூண் அமைக்கும் பணி மேட்டூர் பூங்கா நுழைவு வாயில் முன்பு ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியம், உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×