என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை அருகே இளம்பெண் கற்பழித்து கொலை
பாகூர்:
புதுவை தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகள் அனுசுயா (வயது 32). இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக வெங்கடேசன் உறுதி அளித்ததால் அவரது ஆசைக்கு அனுசுயா இணங்கினார்.
இதில், அனுசுயா கர்ப்பமானார். ஆனால், வெங்கடேசன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். உறவினர்கள் பஞ்சாயத்து பேசி அனுசுயாவுக்கும், வெங்கடேசனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், பெயரளவில் மட்டுமே திருமணம் நடந்ததால் வெங்கடேசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே அனுசுயாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அனுசுயா தனது மகன் விஜய்பாரதியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுசுயா தந்தை வீரப்பன், தாய் உண்ணா மலை ஆகியோர் அடுத் தடுத்து இறந்ததால் அனுசுயா அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் பக்கிரி வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால், சில மாதங்கள் மட்டுமே பக்கிரி தனது வீட்டில் அனுசுயா தங்கி இருக்க அனுமதித்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்படவே அனுசுயா அதே பகுதியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மேலும் புதுவையில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
நேற்று இரவு அந்த பகுதியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அனுசுயா வீட்டில் தூங்கினார். அவரது மகன் விஜயபாரதி எதிர் வீட்டை சேர்ந்த உறவினர் வீட்டில் தூங்கினார்.
இன்று காலை 7 மணிக்கு விஜயபாரதி வீட்டுக்கு சென்றான். அப்போது தாய் அனுசுயா நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினான்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்த போது அனுசுயாவை யாரோ கற்பழித்து தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து அனுசுயாவை கற்பழித்து கொன்றவர்கள் யார் என்பது குறித்தும் அனுசுயாவின் முன்னாள் காதலன் வெங்கடேசன் அடித்து கொன்றாரா? அல்லது அனுசுயாவுக்கு யாருடனாவது கள்ளக்காதல் உண்டாகி அதில் ஏற்பட்ட தகராறில் கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்