search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி
    X

    3-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். #SAvIND #ViratKohli #rahane
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.



    3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.



    செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கடந்த 17-ந்தேதி முடிவடைந்தது. மூன்று நாட்கள் கழித்து இன்று இந்திய அணி வீரர்கள் ஜோகன்னஸ்பர்க் மைதானம் சென்று வலைப்பயிற்சியை மேற்கொண்டனர். விராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர்.



    விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேலும் நீண்டு நேரம் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். மற்ற வீரர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×