என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பார்த்து பிரம்மித்து போனேன்: டி வில்லியர்ஸ்
Byமாலை மலர்18 Jan 2018 4:40 PM GMT (Updated: 18 Jan 2018 4:40 PM GMT)
கேப்டவுன், செஞ்சூரியனில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பார்த்து பிரம்மித்து போனேன் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். #SAvIND #ABDeVilliers
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இத்தொடர் தொடங்குவற்கு முன் இந்திய பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை கைப்பற்றுவார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தென்ஆப்பிரிக்கா அணியில் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை. டி வில்லியர்ஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டு போட்டிகளில் இந்தியாவின் பந்து வீச்சைப் பார்த்து பிரம்மித்து போனேன் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘இந்தியா உண்மையிலேயே என்னை ஈர்த்தது. வேகப்பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தார்கள். வேகப்பந்து வீச்சில் அதிள அளவிலான திறமையை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகத்தில் பந்து வீசினார்கள்’’ என்றார். #SAvIND #ABDeVilliers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X