search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்: முச்சதம் அடித்தார், மயங்க் அகர்வால்
    X

    ரஞ்சி கிரிக்கெட்: முச்சதம் அடித்தார், மயங்க் அகர்வால்

    ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக மாநிலம் தரப்பில் முச்சதம் விளாசிய 3-வது வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றார்.
    ரஞ்சி கிரிக்கெட்டில் புனேயில் நடந்து வரும் மராட்டியத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 628 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மயங்க் அகர்வால் 304 ரன்களுடன் (494 பந்து, 28 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். முதல் தர கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் பதிவான 50-வது முச்சதம் இதுவாகும்.

    அதே சமயம் ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக மாநிலம் தரப்பில் முச்சதம் விளாசிய 3-வது வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றார். இதற்கு முன்பு லோகேஷ் ராகுல், கருண் நாயர் ஆகியோர் முச்சதம் அடித்திருந்தனர்.

    பின்னர் 383 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மராட்டிய அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.
    Next Story
    ×