என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் டோனி ஆடுவார்: மைக்கேல் கிளார்க்
Byமாலை மலர்20 Sep 2017 6:20 AM GMT (Updated: 20 Sep 2017 6:20 AM GMT)
2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் டோனி விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார்.
கொல்கத்தா:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்டீவன் சுமித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிக அற்புதமாக இருந்து வருகிறது. ஆனால் அவரது கேப்டன்ஷிக்கு தற்போது சவால் ஏற்பட்டுள்ளது. அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரமாகும். கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தான் ஒருநாள் தொடரின் போக்கை தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்கக்கூடிய சிறந்த பந்து வீச்சாளர். அவர் ரன்னை மட்டும் கட்டுப்படுத்தும் பந்து வீச்சாளர் அல்ல. மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் அவர் தனது பின்பக்கமாக கையை கட்டுப்படுத்தும் விதம் அபாரமானது. அது தான் அவரது பலமாகும். அவர் எல்லா திறமையையும் ஒருசேர பெற்றுள்ளார். அவர் இருபுறமும் பந்தை திருப்புகிறார். நீண்ட நேரம் பந்து வீசுகிறார். டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.
டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவாரா? என்று என்னிடம் கேட்காதீர்கள். அவர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாடுவார்.
டேவிட் வார்னர் வங்காளதேச தொடரில் சதம் அடித்தார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவர் ரன் அடிக்கவில்லை என்பதை வைத்து அவரது திறமையை எடைபோடக்கூடாது. ரன்கள் அடிக்கும் வழிமுறையை அவர் கண்டுபிடித்து கொள்வார். எப்பொழுதும் அப்படி செய்துள்ளார். அவர் இந்த போட்டி தொடரில் நிறைய தாக்கம் ஏற்படுத்துவார். அவரும், ஸ்டீவன் சுமித்தும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ரன்கள் சேர்ப்பார்கள். கொல்கத்தா போட்டியில் இருந்து அவர்கள் ரன் குவிக்க தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கிளார்க் கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்டீவன் சுமித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிக அற்புதமாக இருந்து வருகிறது. ஆனால் அவரது கேப்டன்ஷிக்கு தற்போது சவால் ஏற்பட்டுள்ளது. அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரமாகும். கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தான் ஒருநாள் தொடரின் போக்கை தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்கக்கூடிய சிறந்த பந்து வீச்சாளர். அவர் ரன்னை மட்டும் கட்டுப்படுத்தும் பந்து வீச்சாளர் அல்ல. மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் அவர் தனது பின்பக்கமாக கையை கட்டுப்படுத்தும் விதம் அபாரமானது. அது தான் அவரது பலமாகும். அவர் எல்லா திறமையையும் ஒருசேர பெற்றுள்ளார். அவர் இருபுறமும் பந்தை திருப்புகிறார். நீண்ட நேரம் பந்து வீசுகிறார். டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.
டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவாரா? என்று என்னிடம் கேட்காதீர்கள். அவர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாடுவார்.
டேவிட் வார்னர் வங்காளதேச தொடரில் சதம் அடித்தார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவர் ரன் அடிக்கவில்லை என்பதை வைத்து அவரது திறமையை எடைபோடக்கூடாது. ரன்கள் அடிக்கும் வழிமுறையை அவர் கண்டுபிடித்து கொள்வார். எப்பொழுதும் அப்படி செய்துள்ளார். அவர் இந்த போட்டி தொடரில் நிறைய தாக்கம் ஏற்படுத்துவார். அவரும், ஸ்டீவன் சுமித்தும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ரன்கள் சேர்ப்பார்கள். கொல்கத்தா போட்டியில் இருந்து அவர்கள் ரன் குவிக்க தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கிளார்க் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X