search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி
    X

    300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.
    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

    மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலிலும் இந்திய அணி பலமுறை முதலிடத்தை பிரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தோனி, நாளை தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக தோனி நின்றார். 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை கணக்கில் கொண்டு தோனி தனது பழைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டு நோக்கர்கள் கருதுகின்றனர்.
    Next Story
    ×