என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழுமலையான் கோவிலில் நாளை தரிசனம்: திருப்பதி வந்தார் துணை ஜனாதிபதி
Byமாலை மலர்10 Jan 2018 2:08 PM GMT (Updated: 10 Jan 2018 2:08 PM GMT)
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை அதிகாலை தரிசனம் செய்வதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று ரேணிகுண்டா வந்தடைந்தார். #VenkaiahNaidu
திருப்பதி:
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் அதிதீவிர பக்தராவார். நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
விரைவில் சங்கராந்தி பண்டிகை வருவதை முன்னிட்டு நாளை அதிகாலை திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்ட துணை ஜனாதிபதி, புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை ரேணிகுண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நாளை அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத தரிசனத்தின்போது அவர் சுவாமியை வழிபாடு செய்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #tamilnews #VenkaiahNaidu #Balajitemple
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X