search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழுமலையான் கோவிலில் நாளை தரிசனம்: திருப்பதி வந்தார் துணை ஜனாதிபதி
    X

    ஏழுமலையான் கோவிலில் நாளை தரிசனம்: திருப்பதி வந்தார் துணை ஜனாதிபதி

    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை அதிகாலை தரிசனம் செய்வதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று ரேணிகுண்டா வந்தடைந்தார். #VenkaiahNaidu
    திருப்பதி:

    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் அதிதீவிர பக்தராவார். நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    விரைவில் சங்கராந்தி பண்டிகை வருவதை முன்னிட்டு நாளை அதிகாலை திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்ட துணை ஜனாதிபதி, புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை ரேணிகுண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    நாளை அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத தரிசனத்தின்போது அவர் சுவாமியை வழிபாடு செய்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #tamilnews #VenkaiahNaidu #Balajitemple
    Next Story
    ×