என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் இறுதிக்கட்ட தேர்தல் - 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
Byமாலை மலர்13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 10:45 PM GMT)
குஜராத்தில் இன்று(வியாழக்கிழமை) 93 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோர் ஓட்டு போடுகிறார்கள்.
ஆமதாபாத்:
குஜராத்தில் இன்று(வியாழக்கிழமை) 93 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோர் ஓட்டு போடுகிறார்கள்.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த 93 தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 52 தொகுதிகளையும், காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றின.
இதனால் இரு கட்சிகளும் 2-வது கட்ட தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வியூகம் அமைத்து செயல்பட்டன. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வாகி இருக்கும் ராகுல்காந்தி மற்றும் பல தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையுடன் இறுதிக் கட்ட பிரசாரம் ஓய்ந்தது.
இதைத்தொடர்ந்து 93 தொகுதிகளிலும் இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 2 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதிகளில் வாக்களிக்க தகுதி ஆனவர்கள் ஆவர்.
பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோருக்கு ஓட்டு குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதனால் 3 தலைவர்களும் இன்று தங்களுடைய வாக்கை பதிவு செய்வதற்காக ஆமதாபாத் நகருக்கு வருகின்றனர்.
குஜராத் சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி தேர்தல் போன்றது என்று கூறப்படுவதால் பா.ஜனதாவும், காங்கிரசும் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி உள்ளன.
மாநிலத்தில் ஆட்சியை பா.ஜனதா கைப்பற்றினால் அது தொடர்ந்து 6-வது முறையாக வெற்றியை ஈட்டி புதிய சாதனை படைக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த பெருமையை பெறும்.
குஜராத்தில் இன்று(வியாழக்கிழமை) 93 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோர் ஓட்டு போடுகிறார்கள்.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த 93 தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 52 தொகுதிகளையும், காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றின.
இதனால் இரு கட்சிகளும் 2-வது கட்ட தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வியூகம் அமைத்து செயல்பட்டன. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வாகி இருக்கும் ராகுல்காந்தி மற்றும் பல தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையுடன் இறுதிக் கட்ட பிரசாரம் ஓய்ந்தது.
இதைத்தொடர்ந்து 93 தொகுதிகளிலும் இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 2 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதிகளில் வாக்களிக்க தகுதி ஆனவர்கள் ஆவர்.
பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோருக்கு ஓட்டு குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதனால் 3 தலைவர்களும் இன்று தங்களுடைய வாக்கை பதிவு செய்வதற்காக ஆமதாபாத் நகருக்கு வருகின்றனர்.
குஜராத் சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி தேர்தல் போன்றது என்று கூறப்படுவதால் பா.ஜனதாவும், காங்கிரசும் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி உள்ளன.
மாநிலத்தில் ஆட்சியை பா.ஜனதா கைப்பற்றினால் அது தொடர்ந்து 6-வது முறையாக வெற்றியை ஈட்டி புதிய சாதனை படைக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த பெருமையை பெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X