என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேசத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் கைது
Byமாலை மலர்21 Nov 2017 2:12 PM GMT (Updated: 21 Nov 2017 2:12 PM GMT)
வங்காள தேசத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சார் பங்களா என்ற இயக்கத்தை சேர்ந்த மூவரை அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தொடர்புடைய தகவல்கள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ள மூவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு துணை ஆணையர் முரளிதர் ஷர்மா தெரிவித்துள்ளார். மத்திய புலனாய்வு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மூவரையும் தேடி வந்ததாகவும் அவர் கூறினார்.
வங்காள தேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக வலைதளத்தில் எழுதிய பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளில் பிடிபட்ட மூவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சார் பங்களா என்ற இயக்கத்தை சேர்ந்த மூவரை அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தொடர்புடைய தகவல்கள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ள மூவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு துணை ஆணையர் முரளிதர் ஷர்மா தெரிவித்துள்ளார். மத்திய புலனாய்வு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மூவரையும் தேடி வந்ததாகவும் அவர் கூறினார்.
வங்காள தேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக வலைதளத்தில் எழுதிய பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளில் பிடிபட்ட மூவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X