search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
    X
    கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

    வங்காள தேசத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் கைது

    வங்காள தேசத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா ரெயில் நிலையத்தில் வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சார் பங்களா என்ற இயக்கத்தை சேர்ந்த மூவரை அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தொடர்புடைய தகவல்கள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ள மூவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு துணை ஆணையர் முரளிதர் ஷர்மா தெரிவித்துள்ளார். மத்திய புலனாய்வு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மூவரையும் தேடி வந்ததாகவும் அவர் கூறினார்.

    வங்காள தேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக வலைதளத்தில் எழுதிய பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளில் பிடிபட்ட மூவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×