என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் சட்டசபை தேர்தல்: 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Byமாலை மலர்19 Nov 2017 6:13 PM GMT (Updated: 19 Nov 2017 6:13 PM GMT)
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கிடையே, குஜராத்தில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
மீதமுள்ள 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் ஜோஷி கூறுகையில், நாங்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானதாக தகவல் பரவியது. பா.ஜ.க.வினர் திட்டமிட்டு இதை வெளியிட்டுள்ளனர். எங்களது லெட்டர் பேடு மற்றும் கட்சி தலைவரின் போலி கையெழுத்து போட்டு தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதற்காக மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கிடையே, குஜராத்தில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
மீதமுள்ள 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் ஜோஷி கூறுகையில், நாங்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானதாக தகவல் பரவியது. பா.ஜ.க.வினர் திட்டமிட்டு இதை வெளியிட்டுள்ளனர். எங்களது லெட்டர் பேடு மற்றும் கட்சி தலைவரின் போலி கையெழுத்து போட்டு தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதற்காக மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X