search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆய்வு செய்யுமாறு கெஜ்ரிவால் உத்தரவு
    X

    டெல்லியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆய்வு செய்யுமாறு கெஜ்ரிவால் உத்தரவு

    ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், பொது விநியோக திட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உணவு மற்றும் நுகர்பொருள் துறை மந்திரி இம்ரான் உசைன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    டெல்லி முழுவதும் 72 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியவசிய பொருட்களை பெற்று வரும் நிலையில், ரேஷன் பொருட்களை அவர்களின் வசிப்பிடம் தேடி அளிக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தனியார் ஏஜென்சிகள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. எனினும், இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயணாளிகள் மிக எளிதாக ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் கூறினர். ரேஷன் வெண்டிங் மெஷின்கள் மற்றும் பயோமெட்ரிக் சிஸ்டம் டேப்லெட் மெஷின்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையும் கெஜ்ரிவால் பார்வையிட்டார்.
    Next Story
    ×