என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்வானிக்கு இன்று 90-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
Byமாலை மலர்8 Nov 2017 5:41 AM GMT (Updated: 8 Nov 2017 5:41 AM GMT)
பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இன்று (புதன்கிழமை) 90-வது பிறந்த தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் தன் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததால் அத்வானி தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.
இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவர்கள் மத்தியில் எல்.கே.அத்வானி பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அவர் பிரிதிவிராஜ் சாலையில் உள்ள தன் வீட்டுக்கு பார்வையற்ற குழந்தைகளை வரவழைத்து இருந்தார்.
90 பார்வையற்ற சிறுவர்- சிறுமியருடன் அமர்ந்து அவர் காலை உணவு சாப்பிட்டார். இதன் மூலம் அத்வானி தொடர்ந்து உற்சாகமாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
அத்வானிக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘‘இந்த இனிய நாளில் நீங்கள் நல்ல உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். கடின உழைப்பு மூலம் இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் அத்வானி.
இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எல்.கே.அத்வானி தனது மனைவி இறந்ததால் சில மாதங்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பா.ஜ.க. நிகழ்ச்சிகளிலும் கூட அவர் பங்கேற்கவில்லை.
ஆனால் கடந்த தீபாவளி தினத்தன்று வாரணாசி சென்று 90 தீபங்களை ஏற்றி வழிபட்டார். அன்று முதல் மீண்டும் அவர் உற்சாகமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இன்று (புதன்கிழமை) 90-வது பிறந்த தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் தன் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததால் அத்வானி தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.
இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவர்கள் மத்தியில் எல்.கே.அத்வானி பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அவர் பிரிதிவிராஜ் சாலையில் உள்ள தன் வீட்டுக்கு பார்வையற்ற குழந்தைகளை வரவழைத்து இருந்தார்.
90 பார்வையற்ற சிறுவர்- சிறுமியருடன் அமர்ந்து அவர் காலை உணவு சாப்பிட்டார். இதன் மூலம் அத்வானி தொடர்ந்து உற்சாகமாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
அத்வானிக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘‘இந்த இனிய நாளில் நீங்கள் நல்ல உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். கடின உழைப்பு மூலம் இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் அத்வானி.
இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எல்.கே.அத்வானி தனது மனைவி இறந்ததால் சில மாதங்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பா.ஜ.க. நிகழ்ச்சிகளிலும் கூட அவர் பங்கேற்கவில்லை.
ஆனால் கடந்த தீபாவளி தினத்தன்று வாரணாசி சென்று 90 தீபங்களை ஏற்றி வழிபட்டார். அன்று முதல் மீண்டும் அவர் உற்சாகமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X