search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு
    X

    உ.பி: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

    இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×