என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறை வாகன ஓட்டுநர் உயிரிழப்பு
Byமாலை மலர்14 Oct 2017 1:45 PM GMT (Updated: 14 Oct 2017 1:45 PM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறை வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள நந்த்மார்க் பகுதியில் இன்று மாலை காவல் துறை வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் காவல் துறை வாகனத்தின் மீது திடீரென துப்பாக்கியால சுட்டு தாக்குதல் நடத்தினர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் காவல் துறை வாகனத்தின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தை கிரேன் மூலம் மீட்டனர். காயமடைந்த போலீஸ்காரரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X