என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் கடன் விவரங்களை காட்டி விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்24 Sep 2017 9:13 PM GMT (Updated: 24 Sep 2017 9:13 PM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 71-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 71-வது நாளை எட்டியது.
இதையொட்டி விவசாயிகள் தங்களது கழுத்தில் அட்டைகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள் வங்கிகளில் பெற்ற கடன் விவரங்களும், நிலபுலன் உள்ளிட்ட விவரங்களும் எழுதப்பட்டு இருந்தன. மேலும், தங்களது வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகள் அல்ல என்று பலர் விமர்சனம் செய்ததாகவும், அவர்களுக்கு தாங்கள் விவசாயிகள்தான் என்பதை தெரியப்படுத்தவே கழுத்தில் அட்டைகளை தொங்க விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 71-வது நாளை எட்டியது.
இதையொட்டி விவசாயிகள் தங்களது கழுத்தில் அட்டைகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள் வங்கிகளில் பெற்ற கடன் விவரங்களும், நிலபுலன் உள்ளிட்ட விவரங்களும் எழுதப்பட்டு இருந்தன. மேலும், தங்களது வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகள் அல்ல என்று பலர் விமர்சனம் செய்ததாகவும், அவர்களுக்கு தாங்கள் விவசாயிகள்தான் என்பதை தெரியப்படுத்தவே கழுத்தில் அட்டைகளை தொங்க விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X