என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவசேனா ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா?: புரிந்துகொள்ள கடினமாக உள்ளது என்கிறார் பவார்
Byமாலை மலர்24 Sep 2017 2:51 PM GMT (Updated: 24 Sep 2017 2:51 PM GMT)
பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் உண்மையான நிலை என்ன என்பதை தெளிவாக விளக்க வேண்டும் என்று சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
சிவசேனா கட்சி பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசியலிலும் அங்கம் வகித்து வருகிறது. ஆனால், பா.ஜனதா ஆட்சியின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களது அரசியல் பத்திரிகையான சாம்னாவில் கடுமையான வகையில் தலையங்கம் எழுதி வருகிறது.
இந்நிலையில் பா.ஜனதா உடனான தொடர்பு குறித்து உண்மையான நிலையை விளக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷரத் பவார் கூறுகையில் ‘‘சிவசேனா மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. சிவசேனா கட்சி விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலான செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருவது பாராட்டுவதற்குறியது.
அதேவேளையில் அந்த கட்சி தனது கொள்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். சிவசேனா கட்சி ஆளுங்கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து புரிந்து கொள்ள கடினமாக உள்ளது’’ என்றார்.
இந்நிலையில் பா.ஜனதா உடனான தொடர்பு குறித்து உண்மையான நிலையை விளக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷரத் பவார் கூறுகையில் ‘‘சிவசேனா மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. சிவசேனா கட்சி விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலான செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருவது பாராட்டுவதற்குறியது.
அதேவேளையில் அந்த கட்சி தனது கொள்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். சிவசேனா கட்சி ஆளுங்கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து புரிந்து கொள்ள கடினமாக உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X