என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தொடரும் கொடூரம்: 5 வயது மாணவியை கற்பழித்த காவலாளி கைது
Byமாலை மலர்10 Sep 2017 12:08 AM GMT (Updated: 10 Sep 2017 12:08 AM GMT)
தலைநகர் டெல்லியில் 5 வயது மாணவியை கற்பழித்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் 5 வயது மாணவியை கற்பழித்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஒரு 5 வயது மாணவி, பள்ளி காவலாளியால் கற்பழிக்கப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
டெல்லியின் ஷதாரா பகுதியில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள பள்ளியில் காவலாளியாக இருந்து வருபவர் விகாஸ் (40).
இவர் அதே பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவியை, அங்குள்ள வகுப்பறையில் வைத்து நேற்று கற்பழித்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என மாணவியை மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதில் பயந்துபோன அவர் தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், மாணவியை கற்பழித்தது பள்ளி காவலாளியாக இருந்த விகாஸ் என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து, விகாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்று 7 வயது சிறுவனை கொலை செய்த பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது தலைநகரில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் 5 வயது மாணவியை கற்பழித்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஒரு 5 வயது மாணவி, பள்ளி காவலாளியால் கற்பழிக்கப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
டெல்லியின் ஷதாரா பகுதியில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள பள்ளியில் காவலாளியாக இருந்து வருபவர் விகாஸ் (40).
இவர் அதே பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவியை, அங்குள்ள வகுப்பறையில் வைத்து நேற்று கற்பழித்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என மாணவியை மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதில் பயந்துபோன அவர் தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், மாணவியை கற்பழித்தது பள்ளி காவலாளியாக இருந்த விகாஸ் என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து, விகாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்று 7 வயது சிறுவனை கொலை செய்த பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது தலைநகரில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X