என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சந்திப்பு
Byமாலை மலர்26 July 2017 3:18 PM GMT (Updated: 26 July 2017 3:18 PM GMT)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக முக்கிய தலைவர்கள் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதேபோல், பல மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் பலர் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து செல்கின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக முக்கிய தலைவர்கள் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதேபோல், பல மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் பலர் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து செல்கின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X