என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களூரு அருகே விபத்து: தனியார் பஸ் டிரைவர் உள்பட 7 பேர் பலி
Byமாலை மலர்25 May 2017 5:06 AM GMT (Updated: 25 May 2017 5:06 AM GMT)
மங்களூரு அருகே பக்கல்அனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்சும் வேனும் மோதிய விபத்தில் 7 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து முர்டீஸ்வர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருரை அடுத்த தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் தர்மசாலா கோவிலில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தனர்.
இந்த வேன் மங்களூரு அருகே பக்கல்அனந்தவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ்சும், இந்த வேனும் மோதியது.
இந்த விபத்தில் தனியார் பஸ் டிரைவர் உமேஷ் (வயது 35), வேனில் வந்த பலாக்ஷி (38), பேபி (38) நாகப்பா (46), சுப்பிரமணியா (15) உள்பட 7 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் காயம் அடைந்த சிலர் மணிப்பால் மற்றும் மங்களூரு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து முர்டீஸ்வர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் மங்களூருரை அடுத்த தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் தர்மசாலா கோவிலில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தனர்.
இந்த வேன் மங்களூரு அருகே பக்கல்அனந்தவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ்சும், இந்த வேனும் மோதியது.
இந்த விபத்தில் தனியார் பஸ் டிரைவர் உமேஷ் (வயது 35), வேனில் வந்த பலாக்ஷி (38), பேபி (38) நாகப்பா (46), சுப்பிரமணியா (15) உள்பட 7 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் காயம் அடைந்த சிலர் மணிப்பால் மற்றும் மங்களூரு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து முர்டீஸ்வர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X