search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மங்களூரு அருகே விபத்து: தனியார் பஸ் டிரைவர் உள்பட 7 பேர் பலி
    X

    மங்களூரு அருகே விபத்து: தனியார் பஸ் டிரைவர் உள்பட 7 பேர் பலி

    மங்களூரு அருகே பக்கல்அனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ்சும் வேனும் மோதிய விபத்தில் 7 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து முர்டீஸ்வர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருரை அடுத்த தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் தர்மசாலா கோவிலில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தனர்.

    இந்த வேன் மங்களூரு அருகே பக்கல்அனந்தவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ்சும், இந்த வேனும் மோதியது.

    இந்த விபத்தில் தனியார் பஸ் டிரைவர் உமேஷ் (வயது 35), வேனில் வந்த பலாக்ஷி (38), பேபி (38) நாகப்பா (46), சுப்பிரமணியா (15) உள்பட 7 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த சிலர் மணிப்பால் மற்றும் மங்களூரு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து முர்டீஸ்வர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×