என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிக்கிறது: அன்னா ஹசாரே வருத்தம்
Byமாலை மலர்8 May 2017 12:08 AM GMT (Updated: 8 May 2017 12:08 AM GMT)
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கெஜ்ரிவால் சிக்கியுள்ளது தனக்கு வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மும்பை:
சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி வந்தார். அவருடன் இணைந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் சில காலம் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
தற்போது கெஜ்ரிவால் தனது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக, அங்கு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது குறித்து தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘40 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான அமைப்பில் ஒரு அங்கத்தினராக நான் இருந்து வருகிறேன். என்னுடன் கெஜ்ரிவாலும் இணைந்தார். நாங்கள் இணைந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோம். டெல்லியில் தலைவிரித்தாடிய ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரமே, அங்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் இன்று அவரே லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஆழமாக படித்த பிறகு விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறிய அன்னா ஹசாரே, ஆனாலும் தற்போது ஊடகங்களில் வெளியான செய்திகள் தனக்கு வேதனை அளித்ததாகவும் தெரிவித்தார்.
சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி வந்தார். அவருடன் இணைந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் சில காலம் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
தற்போது கெஜ்ரிவால் தனது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக, அங்கு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது குறித்து தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘40 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான அமைப்பில் ஒரு அங்கத்தினராக நான் இருந்து வருகிறேன். என்னுடன் கெஜ்ரிவாலும் இணைந்தார். நாங்கள் இணைந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோம். டெல்லியில் தலைவிரித்தாடிய ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரமே, அங்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் இன்று அவரே லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஆழமாக படித்த பிறகு விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறிய அன்னா ஹசாரே, ஆனாலும் தற்போது ஊடகங்களில் வெளியான செய்திகள் தனக்கு வேதனை அளித்ததாகவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X